தந்தை பெரியார் நினைவு நாள்: கோவை அரசு மருத்துவமனைக்கு 100 பேர் உடல் தானம் செய்தனர்

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காட்டாறு இதழ் மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில் 100 பேர் தங்கள் உடலை இறப்புக்கு பின் தானமாக அளிப்பதாக ஒப்புதல் பத்திரத்தை அளித்தனர்.



கோவை: தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக காட்டாறு இதழ், மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில், திராவிடர் தளம் என்ற பெயரில், 100 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.



ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், காட்டாறு வெளியீட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன், தோழர் அறக்கட்டளையை சேர்ந்த சாந்தகுமார், ஆதித்தமிழர் பேரவையின் பொதுசெயாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்புதலை வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ஒவ்வொருவரும் இறப்பிற்கு பின் எங்களது உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கியுள்ளதால், இறந்த பிறகு எங்கள் உடல் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்.



முதல் கட்டமாக 100 நபர்கள் அளித்த ஒப்புதல்கள் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளோம், மேலும் பலர் உடல் தானம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...