சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் மறுக்கட்டுமானம்: லிஃப்ட் வசதியுடன், தரமான கட்டிடங்கள் கட்டப்படும்- அமைச்சர் முத்துசாமி

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்ட குடியிருப்பில் பழுதடைந்த சுமார் 960 வீடுகளை இடித்து அதே இடத்தில் மறுக்கட்டுமானம் பணி அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்ட குடியிருப்பில் பழுதடைந்த வீடுகளை இடித்து அதே இடத்தில் மறுக்கட்டுமானம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 960 வீடுகள் மிக பழுதடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் மறுக்கட்டுமானம் செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆட்சி காலத்தில் அவர்களது கோரிக்கை சரிவர எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதில், பல்வேறு சட்டத் திருத்தங்கள் இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், மக்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு, தற்சமயம் அதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், இங்கு இருந்த பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து அவர்களே கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளனர். இங்கு மிக தரமான, பாதுகாப்பான கட்டிடங்கள் கட்டப்படும். மேலும், பராமரிப்பிற்காக சங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார்.

12 இடங்களில் இருந்து இது போன்ற கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. அதில், மூன்று நான்கு இடங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் மூன்று மாத காலங்களில் பணிகள் துவங்கி விடும். 30 மாத காலங்களில் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், இதற்கான மதிப்பீடு குறித்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அந்த கட்டுமான நிறுவனமே முழுவதும் அனைத்து வேலைகளையும் முடித்து உரிமையாளர்களிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளோம்.

வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 8000 வீடுகள் விற்கப்படாமல் உள்ளது. அதனை விற்பதற்கு சில புதிய திட்டங்களை நாம் உருவாக்கி கொடுத்துள்ளோம். விற்றது போக மீதமுள்ள குடியிருப்புகளை வாடகை குடியிருப்புகளாக மாற்றி விடலாம் என ஆலோசித்துள்ளோம்.



பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்ட பின்பு ஒரு இடத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. 16 மாடிகள் கொண்ட குடியிருப்பாக கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டப்படும் கட்டிடங்களில் லிப்ட் வசதி உள்ளதால், வயதானவர்களுக்கு கீழ் தளத்தில் குடியிருப்புகளை ஒதுக்கி தர வேண்டிய அவசியம் இருக்காது. மொத்தம், 18 லிப்ட் போடப்படும்.

கொசு தொல்லை இருக்காது. காற்று வசதி நன்றாக இருப்பதால், மின்விசிறி பயன்படுத்துவது குறையும். எனவே, மின் கட்டணமும் குறையும், என்றார்.

இதனையடுத்து, அமைச்சர்கள் சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...