கோவை ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலை காஞ்சிபுரத்துக்கு இடமாற்றம் - ரூ.100 கோடி பணிஆணை பாதிப்பு என தொழில்துறை தகவல்

கோவையில் செயல்பட்டு வந்த ஏவுகணை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ரூ.100 கோடி வரை பணி ஆணை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனம் (எல் அண்ட் டி) கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைத்தது.

தேஜஸ் போர் விமானத்தின் இறக்கைகள் உள்ளிட்ட இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏவுகணைகள் தயாரிக்கும் பணி ஆணைகளை பெற்று செயல்பட்டு வந்தது.

பீரங்கி தாக்குதல்களை எதிர்க்கும் ஏவுகணை, கடல்சார் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு விதமான ஏவுகணைகள் கோவையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டன. இது தவிர வால்வ், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உற்பத்தி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதனால் சிறு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணி ஆணைகள் கிடைத்தன. இந்நிலையில் அந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான (டான்சியா) துணை தலைவர் சுருளிவேல் கூறியதாவது,



கோவையில் செயல்பட்டு வந்த ஏவுகணை உற்பத்த தொழிற்சாலை வளாகத்தில் ஏவுகணை உள்ளிட்ட அனைத்து வகை உற்பத்தி பிரிவு தொழில்களுக்கு மாற்றமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள பல சிறு தொழில் நிறுவனங்கள் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து பணி ஆணைகள் பெற்று வந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் போக்குவரத்து செலவு உள்ளிட்ட நிதிசுமை அதிகரிக்கும். இதனால் பெரும்பாலான கோவை தொழில்முனைவோர் பணிஆணை பெற ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்த இடமாற்றத்தால் கோவையில் ரூ.100 கோடி மதிப்பிலான பணி ஆணைகள் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்க (கொசிமா) தலைவர் நல்லதம்பி கூறியதாவது,



மலுமிச்சம்பட்டி அருகே செயல்பட்டு வந்த ஏவுகணை தொழிற்சாலையால் சிட்கோ வளாகத்தில் செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் பயன்பெற்று வந்தன. அந்நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதால் பணிஆணைகள் இந்த மாதம் முதலே பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...