'10 கோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து..!' - கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும்,பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன், பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிப்பு.


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும்,பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கும் வாழும் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. எனவே, பா.ஜ.க., மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் நாட்டு மக்கள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை என்பது இந்த மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பண்டிகை. மனிதன் தனது வாழ்வுக்கும் துணை செய்யும் இயற்கைக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். உலகம் 'மனிதநேயம்' பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற 'உயிர்மைநேயத்தை' வலியுறுத்தி கொண்டே இருக்கிறது.

அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை. பருவமழை மாற்றத்தால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து, உலகம் பேரபயாத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இயற்கையின் முக்கியத்துவத்தை நமக்கும் உணர்த்தும் பொங்கல் திருநாள் மிகமிக முக்கியமானதொரு பண்டிகையாகிறது.

தமிழர்களின் வாழ்வில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனியொரு இடம் உண்டு. தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த பொங்கல் நாளில் அனைவரும், அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி செழிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...