பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்ததால் அப்பகுதியே களைகட்டியது.



கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி மகாசங்கராந்தியும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 17ம் தேதியான இன்று காணும் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரை, பூங்காக்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதே காணும் பொங்கல் தினச் சிறப்பு.



அந்த வகையில், காணும் பொங்கல் தினத்தையொட்டி கோவையில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் உறவினர்கள், நண்பர்களுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



பின்னர், தாங்கள் கொண்டுவந்திருந்த இனிப்புகள், உணவுப் பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு காணும் பொங்கல் தினத்தை உற்சாகமாக் கொண்டாடினர்.



பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கோவைக் குற்றாலத்தில் குவிந்ததால் நுழைவுச் சீட்டு பெறுவதற்கு பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



மக்கள் கூட்டத்தையொட்டி, கோவை குற்றாலம் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...