கோவையில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். 240 நாட்கள் பணிபுரிந்தாலும் பணி நிரந்தரம், என்டிசி ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...