'கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு..!' - ஆட்சியர் சமீரன் உருக்கம்

கோவை மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு என்று கோவை ஆட்சியராக இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர் சமீரன், தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு.


கோவை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை சென்னை செல்லும் அவர் அங்குப் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். இந்நிலையில் கோவை மக்களின் அன்பும் பாசமும் தன்னை மிகவும் கவர்ந்தன எனவும் கோவைக்கு என் இதயத்தில் என்றும் தனியிடம் உண்டு என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அன்புள்ள கோவை மக்களே, கோவையில் எனக்குத் திருப்தியான பதவிக் காலமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இணைந்து பல விஷயங்களைச் செய்து பல விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைத் தொட்டோம்.

கோவிட் நெருக்கடிக் காலத்திலிருந்து இன்று வரை நீங்கள் அனைவரும் அனைத்து நல்ல காரியங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்தீர்கள். கோவை மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு. உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...