விடுதி பெண்களிடம் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தொந்தரவு - கோவை விடுதிகள் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

சரக்கு மற்றும் சேவை வரி சோதனை என்ற பெயரில் அலுவலர்கள், விடுதிகளில் உள்ள பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று கோயமுத்தூர் தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு.



கோவை: கோயமுத்தூர் தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தங்கும் விடுதிகளில் சரக்கு மற்றும் சேவை வரி பிரிவினரால் ரெய்டு செய்யப்பட்டு பெரிய தொகை வரியாக செலுத்த கட்டாயப்படுத்தி உள்ளனர். அந்த அலுவலர்கள் கேட்கும் வரியானது ஹோட்டல்களுக்கு உண்டானது. மாறாக அதனை விடுதிகளுக்கும் சேர்த்து தர சொல்லுவது வருத்தத்திற்குரிய செயலாக கருதுகிறோம்.

ரெய்டு என்ற பெயரில் தங்கள் அலுவலர்கள் எங்களிடமும் தங்கியுள்ள பெண்களிடமும் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுகொள்வதாக இல்லை. எனவே ஆண்கள்/ பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு வரி வசூலிப்பதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடை செய்ய வேண்டும்.

ரெய்டை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், சரக்கு மற்றும் சேவை வரிகள் பொருந்தும் பட்சத்தில் அதை உரிய விளக்கத்துடன் எங்களுக்கு தெரியப்படுத்தி வழி காட்ட வேண்டும், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.



இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் மனுவின் நகல்களை முதலமைச்சர், மத்திய நிதி அமைச்சர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், வணிகவரித்துறை ஆணையாளர் ஆகியவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...