கோவையில் இரண்டு நாட்கள் சிறப்பு வரி வசூல் முகாம்- ஆணையாளர் தகவல்

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மாநகரில் இன்று மற்றும் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.



கோவை: கோவை மாநகராட்சி சார்பில் இன்றும்,நாளையும் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

கோவையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் இன்று மற்றும் நாளை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியினங்களை பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அனைவரும் செலுத்த வேண்டும்.

மார்ச் 31-ந் தேதி வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மாநகரில் இன்று மற்றும் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்தில் 5-வது வாா்டு விசுவாசபுரம் பகுதி, 55-வது வாா்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சிப் பள்ளி, 56-வது வாா்டு சுங்கம் மைதானம், ஒண்டிப்புதூரில் 57, 58-வது வாா்டு நெசவாளா் காலனி, மேற்கு மண்டலத்தில் 34-வது வாா்டு, மஞ்சீஸ்வரி காலனி, கவுண்டம்பாளையம். விநாயகா் கோவில் வளாகம், 35-வது வாா்டு, இடையா்பாளையம், அண்ணா நகா் ஹவுஸிங் யூனிட், 39-வது வாா்டு, சீனிவாசப் பெருமாள் கோவில் வளாகம், கவுண்டம்பாளையம்.

40-வது வாா்டு, வீரகேரளம் சித்தி விநாயகா் காலனி, விநாயகா் கோவில், தின்மையா நகா். தெற்கு மண்டலத்தில், 88-வது வாா்டு, குனியமுத்தூா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, 94-வது வாா்டு, மாச்சம்பாளையம் விநாயகா் கோவில் திடல் பகுதி.

வடக்கு மண்டலம் 11-வது வாா்டு ஜனதா நகா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 15-வது வாா்டு சுப்பிரமணியம் பாளையம் வாா்டு அலுவலகம், 19-வது வாா்டு மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 25-வது வாா்டு காந்திநகா் அரசு மேல்நிலைப்பள்ளி, 28-வது வாா்டு, ஷோபா நகா் வாா்டு அலுவலகம், 29-வது வாா்டு அரிமா சங்கம்.

மத்திய மண்டலத்தில் 32-வது வாா்டு சிறுவா் பூங்கா, சங்கனூா் நாராயணசாமி வீதி, 62-வது வாா்டு, சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 63-வது வாா்டு, பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80-வது வாா்டு, கெம்பட்டி காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 84-வது வாா்டு, ஜி.எம்.நகரில் உள்ளதா்ஹத் இஸ்லாம் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரிவசூல் மையம் வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...