கோவையில் கலவரத்தை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில்,நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், ட்ரோனை கட்டுப்படுத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.


கோவை: கலவரத்தை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, கோவை மாநகர காவல் துறை, பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்தது.



அதன்படி ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஒத்திகை, காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் ட்ரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.



அதே சமயம் கலவரம் நிகழ்வது போன்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது போன்றும் கலவர இடத்தில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் மாணவர்கள், பேராசிரியர்கள், கோவை மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட மாநகர காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...