கோவை ரயில் நிலையத்தில் குவியும் வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊருக்கு பயணம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தியை அடுத்து கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வமாநிலத்தவர்களை தாக்கும் பொய்யான வீடியோ வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கோவையில் ஜவுளித்துறை, தொழில்துறை உள்ளிட்டவற்றில் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு ஒரு சில வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே செல்கின்றனர்.



பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.



கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநில தொழிலாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுரையின் பேரில், அவர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.



இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், தாங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் செல்கிறோம். இங்கு அமைதியாக தான் உள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களால் ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், அச்சத்தால் தங்களை புறப்பட்டு வரும்படி நிர்ப்பந்திப்பதாகத் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வடமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படும் எனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...