வேலைவாய்ப்பு வழங்குங்கள்..! - மயக்கவியல் தொழில்நுட்புநர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மயக்கவியல் தொழில்நுட்புநர் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில் நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படித்து முடித்தும் இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில் நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மயக்கவியல் தொழில் நுட்புநர் படிப்பை முறையாக படித்து பயிற்சி பெற்றுள்ள நிலையில், படிப்பை முடித்து 10 வருடங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கோவிட் காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும் அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தோம்.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து, இதுவரை தங்களுக்கு வேலை வழங்கவில்லை. உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்த தங்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தற்போதைய கல்விமுறை மற்றும் மதிப்பெண் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பை மதிப்பெண் முறையில் பணி நியமனம் செய்யும்பொழுது தங்களுக்கு 50 சதவிகிதம் முன்னுரிமை வழங்க வேண்டும். அறிவியல் பாடப் பிரிவு மற்றும் கலை பாடப்பிரிவில் படித்தவர்களுக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு தொழில் நுட்புநர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...