பெருந்துறையில் அதிக வட்டி தருவதாக மோசடி - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த 4 பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்ததாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எம்.எஸ்.குரு, அமுதன், பார்த்திபன், சுரேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 பேரும் குற்றவாளிகள் என்றும், தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...