ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு - வர்க்கி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களில் ஒன்றான ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


நீலகிரி: தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான ஊட்டி வர்க்கி, மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பல கட்ட ஆய்வுக்குப் பின், கடந்த நவ.,30 புவிசார் குறியீடு இதழில், ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை வெளியானதிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30க்குள் இதற்கு ஆட்சபேம் எழுந்தால், அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில், அந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அந்த வகையில், வரும் மார்ச் 31 லிருந்து, ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

புவிசார் குறியீடு, ஊட்டி வர்க்கிக்குக் கிடைப்பது, ஊட்டியின் பாரம்பரியத்துக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஊட்டியைத் தவிர, வேறு எங்கு தயாரிக்கப்படும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியும்.

இதற்காக பெருமுயற்சி எடுத்த வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறுகையில், ''ஊட்டி வர்க்கிக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம், பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதைத் தரமாகத் தயாரிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே, குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது, இணையற்ற சுவையாக அமையவுள்ளது,'' என்றார்.

மொறுமொறு மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து, அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருளுக்கான பெருமையை உலகறியச் செய்யும்.

இவற்றுடன் மண் பாண்டத்துக்குப் பெயர்பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், குமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினைப் பொருளாகிய மயிலாடி கல் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் அதே நாளில் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...