ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு - 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்தில் நடந்து வந்த புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நேரப்படியே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது.

விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இப்பணிகள் கடந்தாண்டு 2022 ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. ஓராண்டுக்குப் பின் தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஷார்ஜா விமானம் தரையிறங்கும், புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. புனரமைப்பு பணிகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டன. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சற்று தாமதமடைந்தன.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் காற்றின் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்ட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, நேற்று முதன்தினம் மார்ச் 27(திங்கட்கிழமை) முதல் கோவை விமான நிலையம் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது. புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நேரப்படியே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் ஷார்ஜா விமானம் அதிகாலை 4 மணியளவில் கோவையில் தரையிறங்கி மீண்டும் 4.45 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் விமானம் உள்பட சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள் முன்பு இரவு 11 மணி வரை மற்றும் அதிகாலை வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் அவற்றின் சேவை நேரங்கள் மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

கோடை விடுமுறை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பல புதிய அறிவுப்புகளை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...