கொரோனா முன்னெச்சரிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. நேற்றைய (மார்ச்.31) நிலவரப்படி கோவையில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுவரை 108 பேருக்கு தொற்றுபாதித்துள்ளது.

சென்னை 38 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுவரை தமிழகத்தில் 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் இன்று முதல் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக சிம்பிளிசிட்டியிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குநர் நிர்மலா, மருத்துவமனை என்பது கொரோனா உள்ளிட்ட அனைத்து வகையான தொற்றுகளுக்குமான மையமாக உள்ளது. எனவே, நோய் தொற்று குறித்து முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தவும், நோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மருத்துவமனையில் இன்று 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலைத் தடுக்கவும், குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...