கீழ்பவானி பாசன கால்வாய்களை புனரமைக்க வேண்டும்..! - முதல்வருக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம்

கொங்கு மண்டல விவசாயிகள் நலன் காக்கும் வகையில் கீழ்பவானி பாசன கால்வாய்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொங்கு மண்டல விவசாயிகளின் நலனைக் காக்க முந்தைய அரசால் பிறப்பிக்கப்பட்ட G.O MS. NO. 276-ஐ வாபஸ் பெற்று, சூழலியல் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விவசாய மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் LBP கால்வாய்களை புனரமைக்க வேண்டும் என கார்த்திகேய சிவசேனாபதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கீழ்பவானி பாசன திட்டத்தில் அதிமுக அரசு அவசரகதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்காக ஒரு அரசாணையை பிறப்பித்தது.

அதற்குப்பின் நவீனப்படுத்துதல் என்னும் போர்வையில் முற்றிலும் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்து மற்றும் லட்சக்கணக்கான நன்கு வளர்ந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறியவும் திட்டம் தீட்டியது.

இதற்கு கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு முதன்மை விவசாய சங்கங்களும்,விவசாயப் பெருங்குடி மக்கள் சார்பாகவும் அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் நடைபெற்றன.

2020ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் இன்றி கொண்டுவந்த இந்த திட்டத்தினை ஒரு சில ஒப்பந்த தாரர்களின் சார்பில் முனைப்போடு அன்றைய அதிமுக அரசாங்கம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் பாசன சபைகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு பாசன சபைகள் இத்திட்டத்தை செயல்படுத்த ரிட் மனு தாக்கல் செய்தார்கள். நமது அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கான்கிரீட் திட்டத்தை கைவிட முடிவு செய்து நீதிமன்றத்தில் அபிடவிட்டும் அரசு சார்பில் தாக்கல் செய்தது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமால் கான்கிரீட் போடுமாறு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது சுற்றுப்புற சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். நான்கு ஒப்பந்ததாரர்கள் நலனிற்காக, ஒட்டுமொத்த விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும்.

அதிமுக அரசால் அவசரகதியில் விவசாய பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட G.O MS. NO. 276-ஐ வாபஸ் பெறுவது ஒன்றே இதற்கு நல்ல தீர்வாக அமையும். ஆகவே, தயவு கூர்ந்து G.O MS. NO. 276-ஐ வாபஸ் பெற்று, சுழலியல் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விவசாய மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் எவ்வித பாதிப்பும் அடையாமல் LBP கால்வாய்களை புனரமைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...