கோவையில் கல்லூரி மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பு - கடை உரிமையாளருக்கு தர்மஅடி!

கோவை பி.என்.பாளையத்தில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் ராமு என்பவர், கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், பெண்களை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், கடை உரிமையாளர் ராமுவை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது41). இவர் வீட்டின் அருகே ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி இறந்த நிலையில் தனது 21 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் தயாநிதிமாறன் என்ற மாணவர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அப்போது, ராமுவின் செல்போனில் கல்லூரி மாணவரின் வகுப்பில் படிக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இதைக்கண்ட மாணவர் அந்த செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்தார். மேலும், செல்போனை பார்த்தபோது கடைக்கு வந்த ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி மாணவர் கடை உரிமையாளரான ராமுவிடம் கேட்டபோது, ராமு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு வந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து ராமுவை கடுமையாக தாக்கி பந்தயசாலை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் ராமு தனது கடைக்கு வரும் மாணவிகள், பெண்களை செல்போனில் படம் எடுத்து கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...