கோவையில் ரம்லான் சிறப்புத் தொழுகை - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

கோவை குனியமுத்தூரில் ஜாக் கமிட்டி சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டதோடு, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிகொள்கின்றனர்.



கோவை: இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவையில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் கமிட்டியினர் கொண்டாடி வருகின்றனர்.

ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.



ஆகவே, இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் ஜாக் கமிட்டி சார்பில் ரமலான் சிறப்புத் தொழுமை நடத்தப்படுகிறது.



இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டுவருகின்றனர்.



ரமலானையொட்டி, இஸ்லாமிய மக்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவதோடு, ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நாளை கொண்டாடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...