உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக..! - கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்ககோரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் வெண்மணி, கோபால்சாமி, ஆறுமுகம், சுதா, லலிதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், இந்திய உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தெந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டால்தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும் எனவும் அப்போதுதான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.



Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...