சிறுவாணி ஆற்றில் தடுப்பணை - கேரள பேருந்துகளை மறித்து கோவையில் போராட்டம்!

கேரள அரசு, சிறுவாணி ஆற்றில் கட்டும் தடுப்பணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையிலிருந்து கேரளா செல்லும் கேரள போக்குவரத்து கழக பேருந்துகளை மறித்து அனைத்து கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றில் கேரள மாநிலத்தில் அட்டப்பாடி அருகில் கூலி கடவு என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணையை கட்டி வருகிறது. 90% பணிகள் முடிந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு அணைகள் கட்ட ஆயத்தமாகி வருகின்றனர்.



இந்த அணை கட்டுவதால், கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே நிலவும் அபாயம் உள்ளது. இந்த தடுப்பணை கட்டுவதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், தடுப்பணையை அகற்றக்கோரியும் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரள அரசை கண்டித்தும் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலுகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து கேரளா போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...