கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ரவுண்டானாக்கள்..! - காவல் ஆணையர் தகவல்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து ஏற்கனவே இருந்த 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் தேவைப்படும் இடங்களில் புதிதாக நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன வகை போக்குவரத்து சிக்னலை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

சிக்னல் கம்பம் முழுவதும் டிஜிட்டல் மயத்தில் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் ஏற்கனவே 62 போக்குவரத்து சிக்னல்கள் இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முழுவதும் ஆராய்ந்து 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் புதிய நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு ரவுண்டானாக்கள் அமைத்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறைந்திருப்பதாகவும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களே நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இது போல பல்வேறு புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அது போன்று அதிவேகமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...