கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ரவுண்டானாக்கள்..! - காவல் ஆணையர் தகவல்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து ஏற்கனவே இருந்த 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் தேவைப்படும் இடங்களில் புதிதாக நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன வகை போக்குவரத்து சிக்னலை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

சிக்னல் கம்பம் முழுவதும் டிஜிட்டல் மயத்தில் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் ஏற்கனவே 62 போக்குவரத்து சிக்னல்கள் இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முழுவதும் ஆராய்ந்து 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் புதிய நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு ரவுண்டானாக்கள் அமைத்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறைந்திருப்பதாகவும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களே நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இது போல பல்வேறு புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அது போன்று அதிவேகமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...