ஊழல் கறைபடிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் கமல்ஹாசன்..! - கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!

பாஜவின் வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். கடந்த முறைபோல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை தொடங்கிவைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:



சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழும்புகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழே இறங்கி செல்கிறது. மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துதான் கவலைப்படுகிறார்கள்.

கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள். ஆனால் நடவடிக்கை இல்லை. மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்து பணி செய்தேன்.

ஊழல் கரை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன். பாஜகவை பொறுத்தவரையில் கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை.

பாஜகவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர், பிரதமர் பிரச்சாரம் செயல்படுகிறது. கடந்த முறைபோல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் வரும்.

தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதைப் பற்றி மேலும் பேச வேண்டாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...