12 மணிநேர வேலை மசோதா வாபஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிலாளர் தினமான இன்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், திமுக கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை சிந்தாந்திரிபேட்டையில் இன்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்தார். மேலும் மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி எம்எல்ஏக்களுக்கு செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

12 மணி நேர வேலை மசோதா குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது. பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவுமே மசோதா கொண்டு வரப்பட்டது. 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற்ற பின்னரும் அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டினார்.

விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை. அதனை பெருமையாக கருதுகிறேன். சட்டத்தை கொண்டு வரும் துணிச்சலும் அதை திரும்ப பெறும் துணிச்சலும் எங்களுக்கு உள்ளது. திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஐனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...