தாராபுரம் அருகே கோயிலில் தேனீக்கள் தாக்குதல் - 4 வயது சிறுமி உட்பட 15 பேர் பாதிப்பு!

தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற பொதுமக்களை தேனீக்கள் கொட்டியதில் 4 வயது சிறுமி உட்பட 15 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காட்டம்மன் திருக்கோவில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிடச்செல்வது வழக்கம். அந்தவகையில், தேர் பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காட்டம்மன் கோவிலுக்கு நேற்றுச் சென்றனர்.



பக்தர்கள் பொங்கல் வைத்து கொண்டிருக்கும்போது, எழுந்த புகை காரணமாக அங்கிருந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டத் தொடங்கியது. இதில் தேர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மகா (4),சுந்தரபாண்டி (11), பிரியங்கா (21), சுகன்யா (28), பிரியா (32), கவிதா (33), சக்திவேல் (40), கன்னியாத்தாள் (58),வள்ளியம்மாள் (75) உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...