கோவையில் 1,234 சைபர் கிரைம் புகார்கள் பதிவு - மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தகவல்

கோவை மாவட்டத்தில் நடபாண்டில் மட்டும் சைபர் கிரைம் பிரிவில் 1,234 புகார்கள் வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். காவல்நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில், சைபர் கிரைம் தொடர்பாக, 1,234 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சைபர் கிரைமில் மோசடி, ஏமாற்றுதல் என புகார்கள் அதிகமாகி வரு கிறது. நடப்பாண்டில் சைபர் கிரைமில், 1,234 புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதில், 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது 4.61 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தர குவிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் சுமார், 1700 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது. எஸ்.பி., அலுவலகத்தில்அளிக்கப்படும் புகார் மனுக்கள், 5 நாட்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் புகார்களுக்கு, விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 343 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 285 ரவுடிகள் எந்த குற்றமும் செய்யமாட்டோம்" என பிணை பத்திரம் எழுதி தந்துள்ளனர். 48 ரவுடிகள் சிறையில் உள்ளனர். ஜாமீனில் வந்துள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில், கோவை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விசாகப்பட்டணம், பெங்களூரு ஆகிய இரு இடங்களில் இருந்து, அதிகளவு கஞ்சா கடத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில், 145 கல்லுாரிகளில் வருகிற, 8ம் தேதி முதல், போதை பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி முறையாக நடக்கிறது. இ - பீட் மூலமாக ரோந்து பணிகள் முறைப்படுத்தப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...