தேர் திருவிழாவை முன்னிட்டு களை கட்டியது கோனியம்மன் கோவில்.



நாளை நடக்கவிருக்கும் கோவை புகழ் கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

 புதிதாய் கட்டப்பட்டுள்ள கோனியம்மன் திருக்கோயில் ராஜகோபுரமானது முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. 



இன்று இரவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆன்மீக சிறப்புரை மற்றும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து வந்துள்ளனர்.  



 பச்சை பட்டு உடுத்தி, பாரம்பரிய நகைகள் மற்றும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு மேல தாளத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கோனியம்மன் கோவிலில் உள்ள திருவிழா கோடி கம்பத்திற்கு மஞ்சள் கலந்த புனித நீரையுற்றி பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபட்டுவருகின்றனர். 



கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் காவல் படையினர் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோவில் மற்றும் தேர் திருவிழா நடக்கவிருக்கும் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றங்கள் மதியத்திலிருந்து இரவு வரை அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...