கோவையில் சிறுமி பாலியல் வன்டுகொடுமை வழக்கு - சித்தப்பாவிற்கு 20 ஆண்டு சிறை

கோவையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவிற்கு போக்சோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டணையும், அபராதமும் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டில் அவரின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது சித்தப்பா வீட்டில் வசித்து வந்தார். அப்போது, சிறுமியை அவரது சித்தப்பா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பாவிற்கு 22 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...