பெண் ஆய்வாளர் மீது பொய் புகார் கொடுக்க வந்த பெண்கள் - எச்சரித்து அனுப்பிய கோவை சரக டிஐஜி!

கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு பெண் ஆய்வாளர் ஒருவர் மீது பொய் புகார் அளிக்க வந்த 2 பெண்களை டிஐஜி விஜயகுமார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து டிஐஜி விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.


கோவை: கோவை ரெட் பீல்ட் பகுதியில் உள்ள கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு நேற்று இரண்டு பெண்கள் புகார் அளிக்க வந்தனர்.

அந்தப் புகார் மனுவில் பெண் ஆய்வாளர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை பார்த்த டிஐஜி விஜயகுமார், அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

அதில், அந்த பெண்கள் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அது குறித்து ஆய்வாளர் எச்சரித்ததால் அவர் மீது புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஐஜி விஜயகுமார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...