டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டு அளிக்கலாமா..? - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை வாங்க கூடாது என்று செய்தி வெளியான நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.


இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோடுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது என்றும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்றும், உத்தரவை மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...