கோவை வடக்கு மண்டலத்தில் வரும் 25ஆம் தேதி சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண். 4, 10, 11, 21 ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சரவணம்பட்டி வார்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தங்களது சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முதல்முறையாக மண்டல தலைவர் வே.கதிர்வேலின் உத்தரவின் பேரில் வரும் 25 ஆம் தேதி மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், வார்டு எண். 4,10,11, 21 பகுதிகளில் உள்ள வரிதாரர்கள் தங்களது சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் பெயர் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் மற்றும் முடிவுற்ற பழைய சொத்துவரி புத்தகங்களுக்கு புதிய சொத்துவரி புத்தகம் பெறலாம்.

இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பெயர் திருத்தம், இனிஷியல் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம், தொலைபேசி எண் திருத்தம் மற்றும் பதிவு செய்தல் முடிவுற்ற சொத்துவரி புத்தகத்திற்கு பதிலாக புதிய சொத்துவரி புத்தகம் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் தங்கள் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் (2023-24), குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது நகல் (2023-24), சொத்து தொடர்பான ஆவண நகல், இதர ஆவணங்கள் ஏதேனும் ஒரு அடையான அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...