அரசு பேருந்தில் பேராசிரியையிடம் தங்க நாணயத்தை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை குனியமுத்தூர் வழியாக செல்லும் அரசு பேருந்தில் பயணித்த தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத பெண் பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சுகுணாபுரம் அருகே அரசு பேருந்தில் தனியார் கல்லூரி பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (57). இவர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டவுன்ஹால் சென்ற தமிழ்ச்செல்வி ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை செல்ல அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது சுகுணாபுரம் மைல் கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது கைப்பை பேருந்தில் விழுந்ததாக தெரிகிறது. 

அப்போது அந்தப் பையில் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை வைத்திருந்த மஞ்சள் பை மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அருகில் அமர்ந்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மாயமானது தெரியவந்தது. 

இதையடுத்து, தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்க நாணயத்துடன் தப்பிச்சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பேராசிரியையிடம் இருந்து தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...