ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்!

கோவை பீளமேடு அருகே யு.டி.எஸ் என்ற நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 4 திட்டங்களில், 76,000-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்த ரூ.1300 கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார்கள் குவிந்த நிலையில், நிறுவன உரிமையாளர் ரமேஷ் (30) கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை: ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த யுடிஎஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை மாவட்டம் சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பீளமேடு பகுதியில் யு.டி.எஸ்., எனும் நிறுவனத்தை, 2012ம் ஆண்டு துவங்கி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவில் கிளைகளை ஏற்படுத்தினார்.

இந்த நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட, 4 திட்டங்களில், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல், ரமேஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான ரமேஷ் கடந்த, 6ம் தேதி கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சேலத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்தவர், சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். புகார்கள் குவிந்ததால் தலைமறைவானார். 

இந்நிலையில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அறிந்து அவர் டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளதால், அம்மாநில போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். கோவை போலீசாரும் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

முதலீடு செய்த, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், இதுவரை தமிழகத்தில் 50 பேரும், கேரளாவில் 44 பேரும் மட்டுமே புகார் அளித்துள்ளனர். 

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...