தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் ரூ.3.26 லட்சம் கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி!

கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வட தமிழ்நாடு - ரூ.2,01,003 கோடி, மேற்கு தமிழ்நாடு - ரூ.99,037 கோடி, தென் தமிழ்நாடு - ரூ.23,471 கோடி, கிழக்கு தமிழ்நாடு - ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.



கோவை: கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் 2022 - மார்ச் 2023 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் ரூ. 3,26,711 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வட தமிழ்நாடுக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,01,003 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.99,037 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தென் தமிழ்நாடுக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.23,471 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...