சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி, கோவையை சேர்ந்த பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மேற்கொண்டனர்


கோவை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது.



வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள அரசு சார்பில் மாவட்டங்களில் தோறும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் உட்பட பல்வேறு செயல்களில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதன்படி கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவார்.

அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்பினரும் கலந்து கொள்வர்.



இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.



உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி கோவையை சேர்ந்த பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி நேரில் பார்வையிட்டார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...