பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் கேரள அரசு வேகமாக மேற்கொண்டு வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தேக்குவட்டை பகுதியில் கேரள அரசு மேற்கொண்டு வந்த தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இதைதொடர்ந்து தேக்குவட்டை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சக்கண்டி பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது. இந்த பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மீதமுள்ள பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டும் பணிகளை துவக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கேரள அரசின் தடுப்பணை கட்டுமான பணிகள் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுமென தெரிவித்தார். தமிழக அரசின் மெத்தனப்போக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வழக்கு நடத்தாத காரணத்தினால் தான் கேரள அரசு தடுப்பணை பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தடுப்பணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து நாளை க.க.சாவடி பகுதியில் கேரள எல்லையை ஒரு நாள் முழுவதும் மறிக்கும் முற்றுகை போராட்டம் 40 அமைப்புகள் சார்பில் நடைபெற இருப்பதை அவர் தெரிவித்தார்.

Newsletter

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...