கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் இந்திய கார் வகை பிரிவு நாளை திறப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கார்களுக்காக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலமடைந்த கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்காக நாளை (ஆக.18) திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கார்கள் பிரிவு நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

கோவையில் ஜிடி கார் மியூசியம் 2015 ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் நல்லாதரவையடுத்து, இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து வாகனங்களின் சேகரிப்பை சேர்த்து வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னுாட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போது நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு முதல் இந்திய வாகனத்துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய கார் பிரிவு, 10,500 சதுர அடி பரப்பளவில் 40 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இவை, ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலம் அடைந்தவை.



இவை, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேன்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாகும். இவற்றின் தயாரிப்பின் அடையாளங்களாக இவை திகழ்கின்றன.



இங்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள், மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டவை, இன்னும் பல கார்கள் அன்பளிப்பாக கிடைத்தவை. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மக்களுக்காக கார்களை தயாரிக்க மேற்கெள்ளப்பட்ட முயற்சிகளை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.



அருங்காட்சியகத்தின் இந்த சிறப்பு பிரிவு, 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 2023 ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9.00 மணி அளவில் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...