உலக மின்சார வாகன தினம்..!! கோவையில் மின்சார வாகன பேரணி.! ஆட்சியர் தொடங்கி வைப்பு.!

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றன.



உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று உலக மின்சார வாகன தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கண்காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கோவை கொடிசியா வளாகத்திலும் மின்சார வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக மின்சார தினமான இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.



SSEM- Society for Smart E-Mobility சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றது.



இதில் பல்வேறு தனியார் மின்சார வாகன தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தற்போதுள்ள அதிநவீன மின்சார வாகனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...