உலக மின்சார வாகன தினம்..!! கோவையில் மின்சார வாகன பேரணி.! ஆட்சியர் தொடங்கி வைப்பு.!

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றன.



உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று உலக மின்சார வாகன தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கண்காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கோவை கொடிசியா வளாகத்திலும் மின்சார வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக மின்சார தினமான இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.



SSEM- Society for Smart E-Mobility சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றது.



இதில் பல்வேறு தனியார் மின்சார வாகன தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தற்போதுள்ள அதிநவீன மின்சார வாகனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...