பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: சிஎஸ்ஐ மற்றும் ரங்கம்மாள் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

புதைபடிவ எரி பொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ஆம் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம்(Zero Emission Day) கடைப்பிடிக்கப்படுகிறது.



இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இதில் சிஎஸ்ஐ மற்றும் ரங்கம்மாள் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...