காந்தியடிகள் பிறந்தநாள் - கோவையில் கைத்தறி மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் அங்காடியில் முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்இ வைத்தார்.


கோவை: காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் கிராந்திகுமார், அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் புகைப்படங்களுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றைய தினம் அரசு சார்பிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அங்கு இருந்த காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் கிரி அய்யப்பன், கைத்தறித்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...