தாராபுரம் அருகே செயல்படாத இ சேவை மையம் - செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் உள்ள இ சேவை மையம் செயல்படாத காரணத்தினால் பல்வேறு திட்டங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செயல்படாமல் உள்ள இ சேவை மையத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையம் முறையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் இணைப்பதிவாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் வட்டார தலைவர் காளிதாஸ் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் இ சேவை மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த மையத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தும் முறையாக செயல்படுத்துவதில்லை.

இதனால் வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு தனியார் சேவை மையத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .எனவே கொளத்துப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையத்தை முறையாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...