சம்பள உயர்வு வேண்டும் - கோவையில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கத்தினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: சம்பளம் பிரச்சனை தொடர்பாக 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் அனைவருக்கும் 20223 ஆம் ஆண்டு ஒரு 721 ரூபாய் சம்பளம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை இதுவரை தரவில்லை. நீண்ட நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டிரைவர், கிளீனர்கள் அனைவருக்குமே இதுவரை வழங்கவில்லை.



இதனைக்கண்டித்து கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பாக கோவை வ.உ.சி மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த காத்திருப்பு போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள், 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.



மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...