பள்ளிவாசல் இடத்தில் கடைகள் அமைக்க எதிர்ப்பு - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு

பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றி கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, பூ, பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதையும் தடுக்க கோரியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, பூ பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ள மனுவில், சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டி உள்ள நிலையில் தற்போது அந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகின்ற பணியை செய்து வருவதாகவும் இது சட்டத்திற்கு புறமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வெங்கட்ராமன் என்பவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தையும் வாங்கி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடைகளை கட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் அருகில் இருக்கின்ற இடம் கருவூலக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் செல்வாக்கை வைத்து அதனை ரத்து செய்து இருப்பதாகவும் இறந்தவர்களைப் புதைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்திற்காக கடைகளை வாடகைக்கு விட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும்படி அவ்வியக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...