கோயம்புத்தூரில் வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்ணை அறிவித்த மாநகராட்சி

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமான புகார்களுக்கு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கு ஏற்படும் மழைநீர் தேக்கங்கள் இடையூறுகள், கழிவுநீர் அகற்றுதல், மின்விளக்கு பழுதுகள், சாலைகள் பாதிப்பு, மரங்கள் உடைந்து விழுவது ஆகிய புகார்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் பருவமழைக்கான அவசர கால் கட்டுப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறை மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-4709525, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2577216, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551700, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705, மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை வாட்ஸப் கைபேசி எண்-8190000200. பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...