நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு

கிணத்துக்கடவு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை :கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக் கடையில் முறைகேடு கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடை பேரூராட்சிக்குட்பட்ட சின்ன ஐயாகவுண்டன் புதூர், நியாய விலை கடையில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாகவும் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகவும் ரேஷன் பொருட்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதாக கூறினா்.

எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கேஜி சாவடி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும், உக்கடம் கரும்புக்கடை குறிச்சி சுந்தராபுரம் கஸ்தூரி கார்டன் வள்ளல் நகர் செந்தமிழ் நகர் கிருஷ்ணா கல்லூரி மைல்கல் பகுதிகளில் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்தனர். எனவே இந்த வழித்தடங்களில் அரசு மினி பேருந்து அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...