நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு

கிணத்துக்கடவு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை :கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக் கடையில் முறைகேடு கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடை பேரூராட்சிக்குட்பட்ட சின்ன ஐயாகவுண்டன் புதூர், நியாய விலை கடையில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாகவும் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகவும் ரேஷன் பொருட்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதாக கூறினா்.

எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கேஜி சாவடி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும், உக்கடம் கரும்புக்கடை குறிச்சி சுந்தராபுரம் கஸ்தூரி கார்டன் வள்ளல் நகர் செந்தமிழ் நகர் கிருஷ்ணா கல்லூரி மைல்கல் பகுதிகளில் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்தனர். எனவே இந்த வழித்தடங்களில் அரசு மினி பேருந்து அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...