அப்பநாயக்கன்பாளையத்தில் மதுபானக்கடை அமைப்பதை தடுக்கக் கோரி சிபிஐஎம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

துடியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையினை இடமாற்றம் செய்து அப்பநாயக்கன்பாளையத்தில் அக்கடையினை அமைப்பதை தடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் சிபிஐஎம் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா கூறியுள்ளதாவது:-

துடியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதுபான கடை இடமாற்றம் செய்து கோவை மாநகராட்சி 4-வது டிவிசனுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் ஊர் பகுதியில் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இப்பகுதியில் ராம் லட்சுமி அப்பார்ட்பெண்ட், காளியமமாள் காலனி, கேப்டவுன், ஜல்லிக்காடு, பார்க்சிட்டி, அண்ணா நகர், எஸ்எம்டி நகர், கலைஞர் நகர், மெக்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி மக்கள் தற்போது மதுபானக் கடை அமையவுள்ள சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், அச்சாலையினை அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திவருவதால் மதுபானக் கடை செயல்படும் பட்சத்தில் சமூகவிரோத செயல்களால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 

எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையிலான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...