பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுபொருட்கள்: கோவை மாநகராட்சி நடத்தும் சிறப்பு கண்காட்சி நாளை துவக்கம்

கோவையில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை நுகர்வோர்கள் மற்றும் வணிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் 'மை ஷாப்பிங், மை பேக்' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. 



நாளை (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் ஆர்.எஸ்.புரம் மாநகராச்சி கலையரங்கத்தில் நடைபெற உள்ள இக்கண்காட்சியை கோவை மாநகரட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைக்கிறார். மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இக்கண்காட்சியை பார்வையிட எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவை இல்லை என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி குறித்து ராக் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது :- 

வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்கால் ஆன பைகள், குவளைகள், தட்டுகள் உள்ளட்ட பொருட்கள் ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொருட்கள் மண்ணில் மக்காமல் இருந்து நில வளத்தையும், நீர்வளத்தையும் கெடுக்கிறது. மேலும், மழைக் காலங்களில் சாக்கடைகளுக்குள் சிக்கும் பிளாஸ்டிக் பைகள் கழிவு நீர் வழிப் பாதையை அடைத்துவிடுகின்றன. இதனால் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுவிடுகிறது. 

இவை தவிர மேலும் பல்வேறு பிரச்சனைகள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படுகிறது. இதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை கோவைக்கு கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு ராக் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் சில ஆலோசனைகள் வழங்கின. அதன்படி நாளை மாற்றுப் பொருட்களுக்கான 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி நடைபெறுகிறது.



பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கோவையில் வரும் மே-1 ம் தேதி முதல் பிளாஸ்டிகால் தயாரிக்கப்படும் பைகள் மற்றும் தட்டுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மாற்றுப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரிக்கும். அதன்படி, துணிப்பைகள், மரத்தாலான ஸ்பூன்கள், மட்டைத் தட்டுகள் மற்றும் நாரினால் செய்யப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இடம்பெறவுள்ளன. மேலும், இந்த பொருட்களை தயாரிப்பதற்கான இயந்திரங்களும் இதில் இடம் பெற உள்ளன. 



புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், இதுபோன்ற பொருட்களை விநியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...