கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் வழிபட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நேற்று (பிப்.12) முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி வழங்கியது.


கோவை: கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார், 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

மலை உச்சி மீது அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை சுயம்பு வடிவில் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் அதை மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் பக்தர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களை அனுமதிக்க வனத்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று (பிப்.12) முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி வழங்கியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...