கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: கிராமப்புறத்தில் நடக்கும் தீண்டாமைக்கு உரிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் கல்வி, அரசு வேலை வாய்ப்புகளை தங்கள் சமூகத்திற்கும் ஒதுக்க வேண்டும், முடி திருத்தம் நலவாரியத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க வேண்டும், மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சியில் இயங்கி வரும் சலூன் கடைகளில் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.



கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...