கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சாக்கடைகளை தூர்வார மாநகராட்சி ஆணையாளருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (பிப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதி கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி சீர் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இப்பதியில் உப்பு தண்ணீருக்காக தோன்றிய குழிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் தோன்றிய பள்ளங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே இதனையும் கருத்தில் கொண்டு சரி செய்து தருமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...